குடி போதையால் ஏற்ப்படும் தீமைகள் குறித்து கலாச்சார விழிப்புணர்வு கலை பயணத்தை கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறை சார்பில் மது , புகையிலை மற்றும் போதை வஸ்த்துகளால் ஏற்ப்படும் தீமைகள் குறித்த கலாச்சார விழிப்புணர்வு கலைப்பயணமானது கரூர் மாவட்டத்தில் உள்ள குக்கிராமங்களுக்கு தொடர்ந்து 12
நாட்கள் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்த இருக்கின்றது. இந்த பயணத்தின் முதல் நாளான இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருத்து துவங்கியது.