Skip to content
Home » கரூர் அருகே காமராஜர் உடையணிந்து அசத்திய பள்ளி மாணவர்கள்….

கரூர் அருகே காமராஜர் உடையணிந்து அசத்திய பள்ளி மாணவர்கள்….

கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே உள்ள தொட்டியபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி 91 மாணவர்களுடன் செயல்பட்டு வருகிறது. காமராஜர் பிறந்த நாள் விழா முன்னிட்டு பள்ளி மாணவ -மாணவிகள் காமராஜரின் எளிய உடையணிந்து , காமராஜர் மாஸ்க் அணிந்து பள்ளிக்கு சென்றனர். பள்ளியில் காமராஜர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து காமராஜர் சிறப்பு பற்றி பேச்சுப் போட்டி, கட்டுரைப்

போட்டி , வண்ணம் தீட்டும் போட்டி என்று பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. காமராஜரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் காண்பிக்கப்பட்டது. காமராஜர் உடையில் பள்ளிக்கு சென்று மரியாதை செலுத்திய அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் செயல்பாடு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!