Skip to content
Home » கஞ்சா வியாபாரத்தில் கணவனுக்கு “உதவிய” பட்டதாரி மனைவி கைது…

கஞ்சா வியாபாரத்தில் கணவனுக்கு “உதவிய” பட்டதாரி மனைவி கைது…

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகருன்னிஷா (22).  அதே பகுதியில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி. படித்தவர். முதலாவதாக காதல் திருமணம் செய்து கொண்டார். ஒரு வயதில் குழந்தை உள்ள நிலையில் முதல் கணவரை பிரிந்து  2-வதாக அவர் முகமது ரபி என்ற மிட்டாய் ரபி (22) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மிட்டாய் ரவி ரவுடி ஆவார். அவர் மீது  3 கொலை முயற்சி வழக்குகள், 2 கஞ்சா வழக்குகள் உள்ளிட்ட 12 வழக்குகள் உள்ளன.  தற்போது ரவுடி மிட்டாய் ரவி கஞ்சா வியாபாரம் செய்து வருகிறார். அவருக்கு உதவியாக மனைவி ஜெகருன்னிஷாவும் இருந்து வந்ததாக தெரிகிறது. இது குறித்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் நுங்கம்பாக்கம் புஷ்பாநகர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மிட்டாய் ரபியையும், ஜெகருன்னிஷாவையும், உதவி கமிஷனர் ரவி அபிராம், இன்ஸ்பெக்டர் ஷேட்டு ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் சுற்றி வளைத்தனர். ஜெகருன்னிஷா 1.2 கிலோ கஞ்சாவுடன் சிக்கினார். ரவுடி மிட்டாய் ரபி தப்பி ஓடிவிட்டார். போலீசார் ஜெகருன்னிஷாவை சிறையில் அடைத்த நிலையில் தனிப்படைபோலீசார் தற்போது மிட்டாய் ரபியையும் கைது செய்துள்ளனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!