Skip to content
Home » ஓட்டலில் தோசை சுட்ட பிரியங்கா…. கர்நாடகா தேர்தல் பிரசாரத்தில் ருசிகரம்

ஓட்டலில் தோசை சுட்ட பிரியங்கா…. கர்நாடகா தேர்தல் பிரசாரத்தில் ருசிகரம்

கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே 10-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சியின் உத்தர பிரதேச கிழக்கு பகுதி பொது செயலாளரான பிரியங்கா காந்தி  கர்நாடகத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து  தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

அவருடன் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கர்நாடக பொது செயலாளர் பொறுப்பு வகிக்கும் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா மற்றும் கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இந்த சுற்றுப்பயணத்தின்போது, மைசூருவில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் பிரியங்கா காந்தி, காலை உணவு சாப்பிட்டார். அப்போது இட்லி மற்றும் தோசை ஆர்டர் செய்து வாங்கி சாப்பிட்டார். அது நன்றாக இருந்தது என கூறிய அவர், தோசை சுடுவது எப்படி என்று கற்று கொண்டேன் என்றும் வெளியே காத்திருந்த நிருபர்களிடம் கூறினார்.

ஓட்டலின் சமையலறை பகுதிக்கு சென்ற பிரியங்கா காந்தி, அவரே விரும்பி தோசையை கல்லில் வார்த்து, தோசை சுடும் முறையை கற்று கொண்டார்.

ஓட்டல் உரிமையாளர் மற்றும் அவரது குடும்பத்தினரிடமும் சிறிது நேரம் உரையாடினார். அடுத்த முறை வரும்போது தனது மகளையும் அழைத்து வருவேன் என அவர்களிடம் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!