Skip to content
Home » திருச்சி கருமண்டபத்தில் புதிதாக கிளம்பியிருக்கும் மைனர் திருடர்கள்

திருச்சி கருமண்டபத்தில் புதிதாக கிளம்பியிருக்கும் மைனர் திருடர்கள்

திருச்சி மாநகரின் முக்கியமான பகுதி  கருமண்டபம்.  இங்குள்ள வசந்த நகரில் கடந்த 2 தினங்களுக்கு முன்  அதிகாலை2 மணி அளவில் சிறுவர்கள் சிலர்  வீடு ஏறி குதித்து  திருடும் காட்சிகள் அங்குள்ள  கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ளது. முக்கியமாக புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு வீட்டில்   ஒயர்களையும் அவர்கள் திருடி உள்ளனர்.

இந்த திருட்டில் ஈடுபட்டுள்ள சிறுவர்கள்  சுமார்  17வயதுள்ளவர்கள்.  சர்வசாதாரணமாக சுவர் ஏறிக்குதித்து இவர்கள் திருட்டில் ஈடுபட்டு உள்ளனர்.  அப்போது காண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டு இருப்பதை பார்த்த அந்த சிறுவர்கள்  காமிராக்களையும் உடைத்து விட்டு போய்விட்டனர். இதுபற்றி  பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் செய்யவில்லை.

அந்த சிறுவர்களின் அடையாளங்களை பார்க்கும்போது, அவர்கள் இப்போது தான் புதிதாக  தொழிலுக்கு வந்தவர்கள் போல தெரிகிறது. இப்போதே இவர்களை கண்டுபிடித்து  சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் இவர்கள் எதிர்காலத்தில் மேலும் பெரிய பெரிய கைவரிசைகளை காட்டத்தொடங்கி விடுவார்கள்.  கண்காணிப்பு காமிரா பதிவுகளை பார்த்தால் அந்த சிறுவர்களை பிடித்து விடலாம் என கருமண்டபம் பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!