Skip to content
Home » கருணாநிதி நினைவு நாள்…. கரூரில் திமுகவினர் அன்னதானம்

கருணாநிதி நினைவு நாள்…. கரூரில் திமுகவினர் அன்னதானம்

  • by Senthil

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவு நாளையொட்டி  கருரில் இன்று கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை  செலுத்தப்பட்டது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமாநிலையூர் பகுதியில் 36வது வார்டு சார்பாக  கருணாநிதிக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி, மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன், மண்டல தலைவர் ராஜா, வார்டு கவுன்சிலர் வசுமதி பிரபு ஆகியோர் கலந்து கொண்டு கருணாநிதியின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். பொது மக்கள் 500 பேருக்கு வெஜிடபிள் பிரியாணி வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!