Skip to content
Home » கரூர் அருகே 7 டன் தார் திருட்டு…..3 பேர் கைது..

கரூர் அருகே 7 டன் தார் திருட்டு…..3 பேர் கைது..

கரூர் மாவட்டம் தென்னிலை அருகே முத்தனம் பாளையத்தில் வெற்றி கன்ஸ்ட்ரக்சன் என்ற தார் கலவை நிலையம் செயல்பட்டு வருகிறது அந்த நிறுவனத்திற்கு கருஞ்செல்லி பாளையத்தைச் சேர்ந்த அருண்குமார் என்பவருக்கு சொந்தமான தார் கம்பெனியில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்த பசுபதி வயது 30 என்பவர் மிஷின் ஆப்ரேட்டர் ஆக பணிபுரிந்து வருகிறார். அதே நிறுவனத்திற்கு லாரி ஓட்டுனராக விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் லாரி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார் இவர்கள் இருவரும் சேர்ந்து நிறுவனத்தில் ஏழு டன் எடையுள்ள தாரை திருடி திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு விற்பனை செய்துள்ளனர். இவர் திருட்டுத்தனமான தாரை அடிக்கடி வாங்கி வருவதாக கூறப்படுகிறது.

இதனால் நிறுவன உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் மூன்று நபர்களையும் க.பரமத்தி காவல்துறையினர் தார் விற்பனை செய்த பணம் ரூபாய் 3,50,000 அவர்களிடமிருந்து கைப்பற்றி மூன்று நபர்களையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி குளித்தலை கிளைச் சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!