Skip to content
Home » வாட்டி வதைக்கும் வெயில்… மயங்கி கிடந்த முதியவர்….. 3 காவலர்கள் உதவியுடன் மீட்பு….

வாட்டி வதைக்கும் வெயில்… மயங்கி கிடந்த முதியவர்….. 3 காவலர்கள் உதவியுடன் மீட்பு….

  • by Senthil

வெப்பமண்டலமாக மாறிவரும் கரூரில் கடந்த சில நாட்களாக 107 டிகிரிக்கு மேல் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த கடும் வெயிலில் கரூர் மாநகரப் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் அடையாளம் தெரியாத கண்பார்வை இழந்த மாற்றுத் திறன் கொண்ட 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் படுத்திருந்தார்.

ரவுண்டானா பகுதியில் மயங்கிய நிலையில் கிடந்த அவரை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கண்டும் காணாமல் சென்ற நிலையில், அப்பகுதியில் போக்குவரத்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு போக்குவரத்து காவலர்கள் மற்றும் சட்டம்

ஒழுங்கு காவலர் ஒருவர் அவரை அடையாளம் கண்டு, 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பெயரில் அப்பகுதிக்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் மூலமாக அந்த முதியவரை மீட்டு கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக காவலர்கள் அனுப்பி வைத்தனர். அடையாளம் தெரியாத அந்த முதியவருக்கு உதவி செய்த மூன்று காவலர்களின் செயல் பாராட்டை பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!