Skip to content
Home » கரூர் அதிமுக நிர்வாகி கொலை ஏன்….?… 5 ஆயிரம் தான் காரணம்…

கரூர் அதிமுக நிர்வாகி கொலை ஏன்….?… 5 ஆயிரம் தான் காரணம்…

  • by Senthil

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர் பகுதியை சேர்ந்தவர் வடிவேல். கடந்த 4 ம் தேதி இரவு பைக்கில் சென்ற போது இவரை கரூர் திருமாநிலையூர் பகுதியில் 3 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அரிவாளால் கழுத்துப் பகுதியில் வெட்டி விட்டு தப்பியோடினர். ரத்த வெள்ளத்தில் கிடந்த வடிவேலுவை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக கோவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் வடிவேல் உயிரிழந்தார். இதுகுறித்து பசுபதிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த விசாரணையில், வடிவேல் முத்துராஜபுரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தேவா என்பவரிடம், 5 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார். செல்போன் மூலம் தொடர்பு கொள்ளும் போது பேசாமல் புறக்கணித்துள்ளார். இதனால், தேவாவை, வடிவேல் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுநர் தேவா தனது சொந்த ஊரான, லாலாபேட்டை அருகேயுள்ள பொய்கைப் புதூரிலிருந்து சிலரை வரவழைத்து வடிவேலுவை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடி விட்டதாக விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் ஆட்டோ ஓட்டுநர் தேவா உள்ளிட்டோரை தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று, ஆட்டோ ஓட்டுநர் தேவா என்ற மகாதேவன் மற்றும் அவரது சகோதரர் பாலசுப்பிரமணியன், மற்றும் சேகர் ஆகிய 3 பேரும் பசுபதிபாளையம் போலீஸ் ஸ்டேசனில் சரணடைந்தனர். இதையடுத்து 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தியதில், இந்த 3 பேரும் சேர்ந்து வடிவேலுவை வெட்டியதை ஒப்புக் கொண்டுள்ளனர். இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!