Skip to content
Home » கரூரில் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து..ஒருவர் பலி… 4 பேர் படுகாயம்..

கரூரில் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து..ஒருவர் பலி… 4 பேர் படுகாயம்..

கரூர் அடுத்த பாலிடெக்னிக் பிரிவு பகுதியில் ஈரோடு – கரூர் நெடுஞ்சாலையில் கரூரை நோக்கி அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து சாலையில் ஓடியதில் வெங்காய லோடு ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்களில் சாலையின் ஓரத்தில் நின்ற பேசிக் கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. அந்த அதிர்ச்சியில் வெங்காய லோடு ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் தூக்கி வீசப்பட்டு, ஆண் ஒருவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார். மேலும் காரை ஓட்டி வந்த ரெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (43) என்பவரும், இருசக்கர வாகனத்தில் நின்று பேசிக் கொண்டிருந்த முத்துக்குமார், மதியழகன், சிவா உள்ளிட்ட 4 பேர் படுகாயங்களுடன் தீயணைப்பு படை வீரர்கள் உதவியுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த நபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த நபர் யார் என்பது குறித்தும், விபத்து குறித்தும் கரூர் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கோர விபத்து காரணமாக அப்பகுதி சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பாக காணப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!