கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டது. கடந்த மாதம் 17ஆம் தேதியிலிருந்து சிபிஐ அதிகாரிகள் கரூரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் வேலுச்சாமிபுரம் பகுதியைச் சார்ந்த பொதுமக்கள், வியாபாரிகள், பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள்,தவெக வழக்கறிஞர், நிர்வாகிகள், மின்வாரிய அதிகாரிகள், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள், காயம் அடைந்த நபர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
இன்று கரூர் சிபிஐ அலுவலகத்தில் கரூர் மின்வாரிய அதிகாரிகள் 7 நபர்கள் விசாரணைக்காக ஆஜராகி உள்ளனர்.
தவெக பரப்புரையில் மின்சாரம் நிறுத்தப்பட்டதற்கான காரணம், முன்னேற்பாடு பணிகள் உள்ளிட்டவைகள் குறித்து சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கோணத்தில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக மின்வாரிய அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

