Skip to content
Home » கரூரில் தம்பதி கொலை…. நள்ளிரவில் மர்ம நபர்கள் வெறியாட்டம்

கரூரில் தம்பதி கொலை…. நள்ளிரவில் மர்ம நபர்கள் வெறியாட்டம்

கரூர் வாங்கல் ஓடையூர் பகுதியில்  சரவணக்குமார் என்பவருக்கு  சொந்தமான தென்னந்தோப்பில் வேலை செய்து வந்த தொழிலாளி  தங்கவேல்(65) இவரது மனைவி  தைலி(61). இவரும் அந்த தோப்பிலேயே வேலை செய்து வந்தார். இருவரும்  கடந்த 15 வருடங்களாக அங்கேயே தங்கி இருந்து வேலை செய்து வந்தனர்.

இன்று காலை  தங்கவேல், தைலி நடமாட்டம் இல்லை.  காலை 8 மணி அளவில் தோட்டத்திற்கு வந்தவர்கள்  கணவன், மனைவி இருவரும்  கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.  இவர்கள் தலையில் கல்லைபோட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிகிறது .

இது குறித்து  வாங்கல் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்.பி. சுந்தரவதனம் மற்றும் போலீசார் வந்து  சடலங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலை செய்யப்பட்ட தம்பதி திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். வேலைக்காக வாங்கல் ஓடையூருக்கு சென்ற நிலையில் அங்கு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கொலையை செய்தது யார், முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா என பல கோணங்களில் போலீசார் விசாரிக்கிறார்கள். அந்த தோட்டத்தின் உரிமையாளரிடமும் போலீசார் விசாரிக்கிறார்கள்.   கொலை நடந்த இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது சடலங்கள் கிடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம்  காட்டு பகுதிக்குள் ஓடியது. யாரையும் பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்களும் வந்து கைரேகை களை பதிவு செய்தனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!