Skip to content
Home » கரூரில் ஓட்டுநர்களுக்கான சாலை பாதுகாப்பு விதிமுறை குறித்து விழிப்புணர்வு…

கரூரில் ஓட்டுநர்களுக்கான சாலை பாதுகாப்பு விதிமுறை குறித்து விழிப்புணர்வு…

கரூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் தனியார் பள்ளிகள் இணைந்து பள்ளி ஓட்டுநர்களுக்கான சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.

தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலர் செல்வமணி கலந்து கொண்டு தனியார் பள்ளி ஓட்டுனர்கள் பள்ளி மாணவர்களை பேருந்தில் அழைத்து வருவது மீண்டும் அழைத்துச் சென்று வீட்டில் விடும்போது ஏற்படும்

பல்வேறு இடையூறுகளை களைந்து மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

தொடர்ந்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சாலை பயணத்தில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த விளக்கம் அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பள்ளி கல்லூரிகளைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்கள் சாலை விதிகளை கடைபிடித்து பாதுகாப்பாக வாகனங்களை இயக்குவது குறித்த உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர்.  தொடர்ந்து சாலை விபத்தால் உயிரிழந்த குடும்பங்கள் ஏற்படும் இன்னல்கள் குறித்த குறும்படமும் திரையிடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!