தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி, ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் தை மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு இன்று சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை முன்னிட்டு காலபைரவருக்கு ஆலயத்தில் சிவாச்சாரியார் எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய்,இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பெடி, அரிசி மாவு, விபூதி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து சுவாமிக்கு பட்டாடை உடுத்தி வண்ண மாலைகள் அணிவித்த பிறகு
வடைமாலை சாற்றப்பட்டு, பல்வேறு வண்ண மாலைகள் அணிவிக்கப்பட்டு தொடர்ச்சியாக சிவாச்சாரியார் உதிரி பூக்களால் நாமாவளிகள் கூறினார்.
பின்னர் தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்திய சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூரம் ஆலாத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது.
கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற தை மாத தேய்பிறை அஷ்டமி பூஜையை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.