கிருஷ்ணன் ஜெயந்தியை முன்னிட்டு கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணா சாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் கிருஷ்ணர் சுவாமிக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதைத் தொடர்ந்து வெண்ணை காப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் சுவாமிக்கு
உதிரிப்பூக்கள் நாமாவளிகள் கூறிய பிறகு தூப தீபங்கள் காண்பிக்கப்பட்டு நெய் வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர் அதை தொடர்ந்து ஆலயம் அருகே உறியடி திருவிழா நடைபெற்றது.
கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு அண்ணா சாலை அருள்மிகு கற்பக விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற உறியடி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சி ஏற்பாட்டை நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.