Skip to content
Home » ஆயிரம் ஏக்கர் நிலத்தில் உயர் அழுத்த மின் கோபுரம்.. விவசாயிகள் பாதிப்பு…

ஆயிரம் ஏக்கர் நிலத்தில் உயர் அழுத்த மின் கோபுரம்.. விவசாயிகள் பாதிப்பு…

  • by Senthil

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்றது இந்த பணியின் போது ஏராளமான விவசாய நிலங்கள் வழியாக அமைக்கும் பணி நடைபெற்றது. இதில் ஏராளமான விவசாயிகள் உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு குறைந்த அளவு இழப்பீடு வழங்கப்பட்டதாக கூறி இன்று க.பரமத்தி பேருந்து நிறுத்தம் அருகே உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் உயர் அழுத்த மின் கோபுரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பீடு தொகை, ஊக்கத்தொகை வழங்க வேண்டும், புதிய மின் திட்டங்களை கேபிள் மூலம் புதிய தடம் சாலை ஓரம் செயல்படுத்த கோரியும் 30க்கும் மேற்பட்டோர் கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்று அதனை மாவட்ட கலெக்டரிடம் வழங்க உள்ளனர்.

இது குறித்து மாவட்ட தலைவர் கந்தசாமி கூறுகையில் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரியும், புதிய மின் திட்டங்களில் புதைவடம் கேபிள் அமைக்க கோரியும் மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது குறிப்பாக உயர் மின்னழுத்த கோபுரத்தால் க.பரமத்தி, அரவக்குறிச்சி,புகலூர் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!