Skip to content
Home » கரூரில் பங்காளிகள் ஒன்று கூடி தலையில் தேங்காய் உடைக்கும் வினோத திருவிழா…

கரூரில் பங்காளிகள் ஒன்று கூடி தலையில் தேங்காய் உடைக்கும் வினோத திருவிழா…

  • by Senthil

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தென்பாக்கம் செங்கல் கிராமத்துக்கு உட்பட்ட பெரிய சேங்கல் பகுதியில் உள்ள காமாட்சியம்மன், பச்ச மலையாச்சி அம்மன், கருப்பண்ணசாமி,மதுரை வீரன் உள்ளிட்ட ஆலயத்தில் அப்பகுதி சேர்ந்த பங்காளிகள் ஒன்று கூடி நடத்தும் திருவிழாவில் முன்னதாக காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்துவரப்பட்டது.

தொடர்ந்து விரதம் இருந்த ஆண்கள், பெண்கள் தனது வேண்டுதலை நிறைவேற்ற தலையில் தேங்காய்

உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வேண்டுதலையோட்டி கோவில் பூசாரி, விரதம் இருந்த பக்தர்களின் தலையில் தேங்காய் உடைக்கும் வினோத திருவிழா நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து அப்பகுதி உள்ள ஆண்கள் பெண்கள் உள்ளிட்டோர் அமர வைத்து அவர்களுக்கு கோவில் பூசாரியால் சாட்டையடி நிகழ்ச்சி நடைபெற்றது. இங்கு சாட்டையடி பெறுவோர்கள் காற்று,கருப்பு,ஏவல் உள்ளிட்டவைகள் அவர்களை விட்டு நீங்கும் என்பது ஐதீகம். இந்த திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனே நிறைவேற்றிக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து பங்காளிகள் ஒன்று கூடி பொங்கல் வைக்கும் வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!