Skip to content
Home » கரூரில் கொட்டும் மழையில் குடை பிடித்துச் செல்லும் பொதுமக்கள்….

கரூரில் கொட்டும் மழையில் குடை பிடித்துச் செல்லும் பொதுமக்கள்….

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் லேசான மழையும் சில இடங்களில் கனமழையும் பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்துள்ள நிலையில் இன்று காலை முதல் சாரல் மழை பெய்து வந்தது. இந்த நிலையில்

தற்போது கரூர் பேருந்து நிலையம்,பள்ளப்பட்டி , அரவக்குறிச்சி , வேலாயுதம்பாளையம் , நொய்யல் ,ஜகவர் பஜார், வெங்கமேடு, ராயனூர், தாந்தோன்றி மலை, காந்திகிராமம், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் பல்வேறு பொதுமக்கள் கொட்டும் மழையிலும் குடை பிடித்து தங்களது பணிகளை மேற்கொள்ள சென்று வருகின்றனர். காலை முதல் சாரல் மழை பெய்து வந்த நிலையில் தற்போது கனமழை தொடங்கியுள்ளதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!