Skip to content
Home » கரூரில் ஆவணமின்றி எடுத்து வந்த ரூ. 2.60 லட்சம் பணம் பறிமுதல்..

கரூரில் ஆவணமின்றி எடுத்து வந்த ரூ. 2.60 லட்சம் பணம் பறிமுதல்..

நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் நேற்று முதல் அமலுக்கு வந்த நிலையில் கரூர் மாவட்ட எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் பறக்கும் படை அதிகாரிகள் காவல்துறையினர் பல்வேறு கட்ட சோதனையில் ஈடுபட்டு உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்படும் ரொக்க பணங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சுங்க கேட் பகுதியில் பறக்கும் படை இரண்டு அலுவலர் சண்முகசுந்தரம் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் மொத்த மளிகை வியாபாரம் கடையில் வேலை பார்க்கும் சரவணன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த 2 லட்சத்து 6,150 ரூபாய் ரொக்க பணத்தை பறிமுதல் செய்து பின்னர் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் முனிராஜிடம் பணத்தை ஒப்படைத்தனர்.

கரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் உரிய ஆவணங்கள் இன்றி பல லட்சம் கணக்கில் பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!