கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த ஆண்டிப்பட்டிகோட்டை பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (38). கடந்த 10ஆம் தேதி தனது மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனையில் கடையில் பூச்சிமருந்தை வாங்கி சாப்பிட்டுட்டுள்ளார். இதில் மயக்கமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த அவரை அவரது மனைவி இன்று பார்க்க வந்துள்ளார். அப்போது மனைவியுடன் வாய் தகராறு
ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பாலாஜி அவசர வார்டில் உள்ள கட்டில் மற்றும் கண்ணாடி கதவுகளை உடைத்து சேதப்படுத்தி உள்ளார். தகவல் அறிந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை மீட்டு மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் மீண்டும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் மருத்துவக் கல்லூரி முதல்வர் தாமோதரன் மற்றும் மருத்துவ குழுவினர் நேரில் பார்வையிட்டு அவருக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர். இந்த சம்பவத்தின் காரணமாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.