கோவை மாவட்டம் பொள்ளாச்சி,ஆனைமலை, கிணத்துக்கடவு மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து முதல் முறையாக 10 நாட்கள் காசிக்கு தனி ரயிலில் 1500 பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சென்றனர்,இதற்கான தனி சேவையை பாலக்காடு ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது,காசிக்கு ரயிலில் செல்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது எனவும் ஜாதி, மதங்கள், அரசியல் கடந்து யாத்திரை செல்கிறோம், பத்து ஆண்டுகளாக ஸ்ரீ திருச்செந்தூர் முருகன் என்ற அமைப்பு நடத்துகிறோம்,காசிக்கு 9 நாட்கள் ரயிலில் பயணம் மேற்கொண்டு காசி,
கயா, பிரயகர, அயோத்தி நான்கு சுற்றுலா தலங்களுக்கு சென்று வரும் 8ம் தேதி பொள்ளாச்சி திரும்பும் நிலையில் ஜகப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் இவர்களுக்கு சரிவர உணவு கிடைக்காதாலும் அப்படி கிடைத்தவுடன் உணவும் கெட்டுப் போய் இருப்பதாக பொள்ளாச்சியில் இருந்து சென்ற பக்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றனர் .
பொள்ளாச்சியில் இருந்து காசி யாத்திரை சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்ற பயணிகளுக்கு சரிவர உணவு வழங்கி அவர்களை பாதுகாப்பாக ஊர் அழைத்து வர வேண்டும் என்பது பக்தர்கள் கோரிக்கையாக உள்ளது.