Skip to content
Home » கோடிக்கரை வன உயிரின சரணாலயத்தில் கணக்கெடுப்பில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள்…

கோடிக்கரை வன உயிரின சரணாலயத்தில் கணக்கெடுப்பில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள்…

நாகை மாவட்டம், வேதாரணியம் அடுத்த கோடியக்கரை வனவிலங்கு வன உயிரின சரணாலயம் 2250 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது . இச் சரணாலயத்தில் வெளிமான் புள்ளிமான் நரி முயல் குதிரை என வனவிலங்குகள் உள்ளன. ஆண்டு தோறும் நடைபெறும் வன விலங்குகள் கணக்கெடுப்பு இன்று காலை தொடங்கியுள்ளது. கணக்கெடுப்பில் மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி மாணவர்கள் கோடிக்கரை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், வனத்துறையினர்

என அறுபது பேர் ஈடுபட்டுள்ளனர். வன சரணாலயத்தில் 14 வழி தடங்களில் 16 வகையான வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது. கணக்கெடுப்பில் வனச்சரக அலுவலர் அயூப்கான் வனவர்கள் பெரியசாமி, ராமதாஸ் உள்ளிட்ட வனத்துறையினர் கல்லூரி பேராசிரியர் பாஸ்கரன் ஆகியோர் கணக்கெடுப்பு குறித்து பயிற்சி அளித்தனர். வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி முடிந்த பின் வன உயிரினங்களின் எண்ணிக்கை வெளியிடப்படும் என வசை சரக அலுவலர் அயூப்கான் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!