Skip to content
Home » திருச்சி கொள்ளிடம் பாலத்தில் பெண் எரித்து கொலை….. யார் அவர்?

திருச்சி கொள்ளிடம் பாலத்தில் பெண் எரித்து கொலை….. யார் அவர்?

  • by Senthil

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை கொள்ளிடம் பாலம் 9வது பாலக்கட்டைக்கு  அடியில் இன்று காலை ஒரு பெண்  சடலம் எரிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.  அந்த பெண்ணுக்கு  45 முதல் 50 வயதுக்குள் இருக்கும்.   தலை மற்றும் மார்பு வரையிலான  பகுதி முழுவதும் எரிந்து விட்டது. வயிற்றுக்கு கீழ் உள்ள பகுதி  எரியவில்லை. எனவே அந்த பெண்ணை எங்கோ  கொலை செய்து  இங்கு கொண்டு வந்து எரித்து உள்ளனர். வேறு தடயங்கள் எதுவும் அங்கு காணப்படவில்லை.

இதுபற்றிய தகவல் அறிந்த  அந்த பகுதி மக்கள்  கொள்ளிடம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் தகவலின் அடிப்படையில் வந்த போலீசார் எரிந்த நிலையில் இருந்த பெண் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் இந்தப் பெண் யார்? இங்கு எப்படி வந்தார்? யார் கொலை செய்தார்கள்? எனவும்   பல கோணத்தில்  விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த சம்பவம் திருச்சி போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!