Skip to content
Home » கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியை ஆய்வு செய்த கலெக்டர்…..

கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியை ஆய்வு செய்த கலெக்டர்…..

  • by Senthil

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம், கூகூர் கிராமத்தில் நீர்வளத்துறை கனிமம் மற்றும் கண்காணிப்பு கோட்டத்திற்குட்பட்ட கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் .அபிராமி, லால்குடி வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆர்.குணசீலன், நீர்வளத்துறை கனிமம் மற்றும் கண்காணிப்பு கோட்ட செயற்பொறியாளர்

பவளக்கண்ணன், உதவி செயற்பொறியாளர் ஜெயராமன், உதவி இயக்குநர் சுரங்கம் மற்றும் புவியியல் துறை பாலமுருகன், இலால்குடி நகராட்சி ஆணையர் குமார், உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள், காவல் துறையினர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!