Skip to content
Home » கூலி’யை கதற விட்டு மொரீஷியஸில் இளையராஜா ரிலாக்ஸ்….

கூலி’யை கதற விட்டு மொரீஷியஸில் இளையராஜா ரிலாக்ஸ்….

கடந்த சில நாட்களாகவே தலைப்பு செய்திகளில் இளையராஜா பரபரப்பைக் கூட்டியிருக்கிறார். பாடல்களுக்கான உரிமம் பெறுவது தொடர்பான வழக்கில் பேசுபொருளாக இருந்தவர் ரஜினிகாந்தின் ‘கூலி’ படத்தையும் காலி செய்துள்ளார். ‘கூலி’ படத்தின் டைட்டில் டீசரில் இரண்டு பாடல்கள் இடம் பெற்றிருந்தன.

ரஜினி - இளையராஜா
ரஜினி – இளையராஜா

‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தில் இடம்பெற்ற ‘சம்போ சிவ சம்போ’ பாடலின் வரிகளும், ‘தங்கமகன்’ படத்தில் இடம்பெற்ற ‘வா வா பக்கம் வா’ எனும் பாடலின் இசை பின்னணியிலும் பயன்படுத்தப்பட்டு இருந்தது. இதற்காக ‘கூலி’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸூக்கு, தனது பாடலுக்கு முறையான உரிமம் பெற வேண்டும் அல்லது ’கூலி’ படத்தின் டீசரில் இருந்து அவற்றை நீக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பினார் இளையராஜா.

இந்நிலையில், மொரீஷியஸ் தீவுகளில் ரிலாக்ஸ் செய்து கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இளையராஜா. பேண்ட், ஷர்ட் அணிந்து கடற்கரையைப் பார்த்து தனிமையில் அமர்ந்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!