Skip to content
Home » வீடு இடிந்து ஒருவர் பலி….. கோரம்பள்ளம் ஏரி உடைப்பு

வீடு இடிந்து ஒருவர் பலி….. கோரம்பள்ளம் ஏரி உடைப்பு

  • by Senthil

நெல்லை பாளையங்கோட்டையில் இன்று காலை கனமழை காரணமாக ஒரு வீடு இடிந்து விழுந்தது. இந்த இடிபாட்டில் சிக்கி ஒருவர்  பலியானார். தூத்துக்குடி மாவட்டத்தின் பெரிய ஏரியான கோரம்பள்ளம் ஏரி  கடந்த  சிலநாட்கள் வரை 50 சதவீதம் மட்டுமே நிறைந்திருந்த இந்த ஏரி நேற்று முன்தினம் இரவும், நேற்று பகலிலும் பெய்த கனமழையால் நிரம்பியது. இன்று காலையும் தொடர்ந்து மழை கொட்டியதால் அந்த ஏரி உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது.

வறட்சி பகுதியான ஆலங்குளம் சுற்று வட்டாரத்திலும் கனமழை காரணமாக  வயல்கள் தண்ணீரில் மூழ்கி கிடக்கிறது. வாழை, நெற்பயிர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!