Skip to content
Home » கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழித்தல்…. புத்தகம் வௌியீடு….

கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழித்தல்…. புத்தகம் வௌியீடு….

  • by Senthil

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (23.2.2023) தலைமைச் செயலகத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள, “கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழித்தல் – தமிழ்நாடு அரசின் சீரிய முயற்சிகள்” மற்றும் “குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றுதல் – தமிழ்நாடு அரசின் சீரிய முயற்சிகள்” ஆகிய தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்களை வெளியிட்டார். உடன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு,  தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. முகமது நசிமுத்தின்,  முதன்மைச் செயலாளர்/ தொழிலாளர் ஆணையர் முனைவர் அதுல் ஆனந்த் ஆகியோர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!