Skip to content
Home » கோட்டூர் பேரூராட்சி நிர்வாகம் விவசாய நிலங்களில் குப்பைகளை கொட்டுகிறது…

கோட்டூர் பேரூராட்சி நிர்வாகம் விவசாய நிலங்களில் குப்பைகளை கொட்டுகிறது…

  • by Senthil

கோவை மாவட்டம் ஆனைமலை பகுதி கோட்டூர் மலையாண்டி பட்டினம், மதிப்பாதை வழிதடத்தில் கோட்டூர் பேரூராட்சி நிர்வாகம் கடந்த சில நாட்களாக விவசாய நிலம் மற்றும் அப்பகுதியில் உள்ள நீர் நிலைகளில் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதாகவும் இதனால் விவசாயம் மற்றும் நீர்நிலைகள் பாதிக்கப்படுவதாகவும், கால்நடைகள் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.மேலும் இது சம்பந்தமாக மாவட்ட வருவாய் அலுவலர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு இவ்விடத்தில் குப்பைகளை கொட்ட கூடாது என்று ஏற்கனவே அறிவுறுத்தியிருந்த நிலையில் பேரூராட்சி நிர்வாகம் குப்பைகள் கொட்டுவது சிமெண்ட் கால்கள் கட்டி இடையூறு செய்து வருவதாகவும் இத்தகைய செயல்களை தடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் சு.பழனிசாமி கோரிக்கை விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!