Skip to content
Home » கோவையில் வீரமரணமடைந்த காவலர்களுக்கு நினைவு நாள் அனுசரிப்பு…

கோவையில் வீரமரணமடைந்த காவலர்களுக்கு நினைவு நாள் அனுசரிப்பு…

கோவை மாநகர காவல்துறை சார்பில் வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. கோவை மாநகர காவல் துறையில் பணியின் பொழுது வீர மரணம் அடைந்த காவலர்களுக்கு நினைவு செலுத்தும் நிகழ்ச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்றது. கோவை மாநகர காவல்

ஆணையாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாநகர காவல் ஆணையாளர் உட்பட காவல் அதிகாரிகள் கருப்பு பேட்ச் அணிந்து கலந்து கொண்டனர். மேலும் இதில் உயிரிழந்த காவலர்களின் குடும்பத்தினர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!