Skip to content
Home » கோவையில் ஆஞ்சநேயர் சிலையை தொட்டு வணங்கி சென்ற யானை…

கோவையில் ஆஞ்சநேயர் சிலையை தொட்டு வணங்கி சென்ற யானை…

கோவை மேற்கு தொடர்ச்சி அடிவாரங்களில் யானைகளின் நடமாட்டம் சமீப காலமாக அதிக அளவில் காணப்படுகிறது. உணவு தேடியும், குடிநீர் தேடியும் குடியிருப்பு பகுதிகள், விவசாயப் பகுதிகளில் யானைகள் சுற்றித் திரிகின்றன. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மலையடிவாரத்தை ஒட்டி உள்ள பகுதியில்

உள்ள தனியார் பள்ளி வளாகத்திற்குள் யானை சுற்றி திரிந்தது. அப்போது பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்த ஆஞ்சநேயர் சிலையை யானை தொட்டு நுகர்ந்து சென்றது. யானை கடவுள் சிலையை தொட்டு வணங்கிச் சென்றதாக கூறி பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!