Skip to content
Home » கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுதிறனாளி தற்கொலை முயற்சி…

கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுதிறனாளி தற்கொலை முயற்சி…

  • by Senthil

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை ரோட்டில் உள்ள ஸ்ரீ ரங்கராய ஓடை பகுதியில் வசித்து வருபவர் முகமது சாதிக் பாஷா. மாற்றுத்திறனாளியான இவருக்கு திருமணம் ஆகி ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர் கோத்தகிரி சாலையில் ஓடந்துறை செக் போஸ்ட் அருகில் வாடகை அலுவலகம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்னர் கடையை உடனடியாக காலி செய்ய வேண்டும் என உரிமையாளர் கூறியதை அடுத்து இரண்டு மாதங்கள் அவகாசம் கேட்டுள்ளார். ஆனால் அவர் தர மறுத்துள்ளார். இதனிடையே கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கடையை உடைத்து சுமார் ரூ. 7 லட்சம் மதிப்புள்ள பொருட்களை சிலர் திருடி சென்று உள்ளனர். இதனை அடுத்து மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் சாதிக் பாட்ஷா புகார் கொடுத்துள்ளார்.

காவல் நிலையத்தில் சி.எஸ்.ஆர்.பதிவு செய்யப்பட்டுள்ளது ஆனால் எப்.ஐ.ஆர் இதுவரை போடவில்லை என கூறப்படுகிறது.

இது தொடர்பாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தபோது இவர் தீக்குளிக்க முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போதே போலீசார் இவரிடம் எச்சரித்து அனுப்பினர். இதனிடையே கடந்த ஓராண்டுக்கு மேலாகவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போலீஸ் சோதனை செய்வதை அறிந்து கொண்டவுடன் உடனடியாக தன் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சாணி பவுடர் கலந்த நீரை எடுத்து குடித்தார். உடனடியாக போலீசார் ஓடி சென்று அவரிடம் இருந்த சாணி பவுடர் கலக்கிய குடிநீர் பாட்டிலை அப்புறப்படுத்தினர். பின்னர் அவரை உடனடியாக ஒரு ஆட்டோவில் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர் . அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே தீக்குளிக்க முயற்சியில் ஈடுபட்ட அவர் சுமார் ஒன்பது மாதங்கள் கழித்து மீண்டும் சாணி பவர் குடித்து தற்கொலை முயற்சியில் இரண்டாவது தடவையாக ஈடுபட்டுள்ளார்.

இதனை கண்ட பொதுமக்கள் மாற்றுத்திறனாளியின் நிலை கண்டு பரிதாபம் தெரிவித்ததோடு மாவட்ட நிர்வாகம் உடனடியாக மாற்றுத்திறனாளி சாதிக் பாஷாவின் மனுவை பரிசீலிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இரண்டாவது முறையாக மாற்றுத்திறனாளி தற்கொலைக்கு முயன்ற இச்சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!