கோவை புறநகர் வடக்கு மாவட்ட முன்னாள் திமுக செயலாளர் பையா கவுண்டர் என்கிற பையா கிருஷ்ணன்(65). இவர் கோவை காளப்பட்டியில் வசித்து வந்தார். இன்று காலை அவர் அறையை விட்டு வெளியே வராததால் அந்த அறைக்குள் சென்று பார்த்தபோது அவர் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இவர் கடந்த முறை கவுண்டம்பட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். இவரது தற்கொலை திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பையா கிருஷ்ணன் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார்.