Skip to content
Home » கோவை தொழிலதிபர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை….

கோவை தொழிலதிபர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை….

கோவை வடவள்ளி ஸ்ரீதக்‌ஷா பிராப்பர்டீஸ் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன மேலாண் இயக்குநர் மோகன் என்பவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.அதன் ஒரு பகுதியாக கோவை வடவள்ளி தொண்டாமுத்தூர் சாலையிலுள்ள பிரபல தொழிலதிபரான மோகன் என்பவரது வீட்டில் 7 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டு வாகனங்களில் வந்து காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.கோவையை மையமாக வைத்து ஸ்ரீதக்‌ஷா பிராப்பர்டீஸ் அண்ட் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடட் என்ற பெயரில் கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் இவர் கடந்த சில ஆண்டுகளில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறப்படுகிறது.  இதேபோல் வடவள்ளி மருதமலை சாலையில் உள்ள அவரது அலுவலகத்திலும் நான்கு பேர் கொண்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!