Skip to content
Home » கோவை அருகே இரவில் உலாவரும் யானைகள்… பொதுமக்கள் அச்சம்… வீடியோ…

கோவை அருகே இரவில் உலாவரும் யானைகள்… பொதுமக்கள் அச்சம்… வீடியோ…

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர், பேரூர், தடாகம், மாங்கரை, மருதமலை ஆகிய பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அண்மை காலங்களாக அதிகரித்து வருகிறது. இப்பகுதியில் அடிக்கடி ஊருக்குள் உலா வரும் யானைகள் விவசாய நிலங்களை சேதப்படுத்துவதோடு சில சமயங்களில் உணவிற்காக வீடுகளையும் சேதப்படுத்துகின்றன.

இந்நிலையில் ஆலந்துறையை அடுத்த சின்னாற்று பகுதியில், மாலை நேரத்திலேயே 2 காட்டு யானைகள் ஊருக்குள் உலா வந்துள்ளன. இதனை பார்த்த ஊர் மக்கள் அதிர்ச்சி அடைந்து யானை வரும் பாதையில் இருந்து அலறி அடித்துக் கொண்டு ஓடினர். இதனை அடுத்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு அங்கு வந்த வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள்

விரட்டினர். இந்நிலையில் யானை ஊருக்குள் உலா வந்த செல்போன் வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வழக்கமாக இரவு நேரங்களில் ஊருக்குள் வரும் யானைகள் தற்பொழுது மாலை நேரங்களிலேயே ஊருக்குள் வருவதால் பொதுமக்களும் அப்பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகளும் அச்சமடைந்துள்ளனர். எனவே வனத்துறையினர் நாள்தோறும் அப்பகுதியில் ரோந்து பணிகளை மேற்கொண்டு காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறாத வண்ணம் நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!