Skip to content
Home » கோவையில் பெட்ரோல் சிறிது சிந்தியதால் பங்க் பெண் மீது தாக்குதல்…

கோவையில் பெட்ரோல் சிறிது சிந்தியதால் பங்க் பெண் மீது தாக்குதல்…

  • by Senthil

கோவை மணிக்கூண்டு அருகிலுள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயம் முன்பு
நிலர் பெட்ரோல் பங்க் உள்ளது இன்று மாலை கேடிஎம் பைக்கில் சலீம் என்பவர் வந்து உள்ளார்.
அப்போது பெட்ரோல் பங்க் வேலை பார்க்கும் நளினி என்பவர் கேடிஎம் பைக்குக்கு பெட்ரோல் அடித்துள்ளார். அப்போது சிறிது பெட்ரோல் சிந்தியதாக தெரிகிறது. இதன் காரணமாக சலீம்க்கும் நளினிக்கும் வாக்குவாதம்

ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் சலீம் பங்கில் வேலை பார்க்கும் நளினியை தாக்கியுள்ளார்.
இதன் காரணமாக நளினிக்கு நெற்றியில் ரத்த காயம் ஏற்பட்டுள்ளது. நளினி தற்போது அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து உக்கடம் காவல் நிலையத்தில் அந்த பெண்ணை தாக்கிய சலீம் போலீசார் கைது செய்து உள்ளனர். சலீம் உக்கடம் பகுதியில் கறிக்கடை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!