Skip to content
Home » கோவையில் 3 லட்சம் மதிப்புள்ள நகை திருட்டு…. போலீஸ் விசாரணை….

கோவையில் 3 லட்சம் மதிப்புள்ள நகை திருட்டு…. போலீஸ் விசாரணை….

  • by Senthil

கோவை, பொள்ளாச்சி மகாலிங்கபுரம் திருவள்ளுவர் வீதியில் வேலுச்சாமி குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று இரவு வேலுச்சாமியும் மனைவியும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர் வீட்டின் முன் கதவை உடைத்து பீரோவில் இருந்த சுமார் ஏழு சவரன் மூன்று லட்சம் மதிப்பு உள்ள தங்கச் செயின் திருடுசென்றுவிட்டனர். மேலும் அதன் அருகில் உள்ள இரண்டு வீடுகளும் உடைக்கப்பட்டுள்ளது. அந்த இரண்டு வீடுகளிலும் எந்த ஒரு பொருட்களும் திருடு போகவில்லை. இது வேலுச்சாமி மகாலிங்கபுரம் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்ததும் பேரில் ஆய்வாளர் ஆனந்த் குமார் தலைமையில் சி.சி.டி.வி காட்சிகள் மற்றும் அப்பகுதியில் இரவில் நடமாடிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மகாலிங்கபுரத்தில் கடந்த சில மாதங்களாக மர்ம நபர்கள் தொடர்ந்து வீடுகளில் பூட்டை உடைத்து கைவரிசை காட்டி வருவதால் போலீசார் கூடுதலாக ரோந்து பணியில் ஈடுபடுபட போவதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு தங்கள் வீடுகளில் சிசிடிவி கேமரா பொருத்த போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!