Skip to content

கரூர் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்… VSB பங்கேற்பு

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காம்புலியூரில் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு ஸ்ரீ லஷ்மி நாராயண சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவில் பல ஆண்டுகளாக மிகவும் சிதிலமடைந்து காணப்பட்டு வருகிறது. இதனை புனரமைத்து கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் எனக் கூறி அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை அக்கோவிலை புனரமைத்து கோவில்

கட்டுமானப் பணி செய்வதற்கான பாலாலயம் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!