Skip to content
Home » மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை நடவு பணி துவங்கியது

மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை நடவு பணி துவங்கியது

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்வதற்காக  ஆண்டுதோறும் மேட்டூர் அணை ஜூன் 12ல் திறக்கப்படும். மேட்டூர் அணை திறக்கப்படுவதற்கு முன்னரே மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை சாகுபடி  பணிகள் தொடங்கி விடும்.

இந்த ஆண்டும் வழக்கம் போல மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை சாகுபடி தொடங்கி விட்டது.  நடப்பாண்டு 93 ஆயிரத்து 711 ஏக்கரில் இலக்கு  குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது . நிலத்தடிநீரைக் கொண்டு, குத்தாலம், மயிலாடுதுறை தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய நான்கு தாலுகாக்களில் பல்வேறு பகுதிகளில் குறுவை சாகுபடிக்கான பணிகள் நடந்து வருகிறது.

நிலத்தை, அண்டை வெட்டுதல், நிரவுதல் டிராக்டர் இயந்திரம் மூலம் உழவடித்தல் போன்ற வேலைகளை செய்தும் வருகின்றனர். பாய்நாற்றங்கால்களில் முளைத்த நாற்றுகளை வயலில் தற்போது நடவு செய்யும் பணியும் சில இடங்களில் நடந்து வருகிறது.   இதற்குள் மாவட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கர் வரையில் நடவு பணிகள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை சுற்றியுள்ள கிராம புறங்களில் நாற்று நடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.மாவட்டத்தில் கோடைவெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும், தங்களுக்கு களைப்பு தெரியாமல் இருக்கவும், பணி சுணக்கம் இன்றி மும்முரமாய் நடவு செய்யவும் பெண்கள் தங்களுக்கு தெரிந்த நாட்டுப்புற பாடல்கள், தெம்மாங்கு பாடல்களை சினிமா பாடல் பாடி உற்சாகத்தோடு நாற்று நடும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!