Skip to content

நடுரோட்டில் சித்தியை குத்தி கொன்ற வாலிபர்… தஞ்சை அருகே பயங்கரம்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை கரிகாடு பகுதியை சேர்ந்த அன்பழகன் மனைவி சுசிலா(55). இவர் இன்று  முதல்சேரி என்ற கிராமத்தில்   ஒரு புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பிக்கொண்டு இருந்தார். அப்போது பட்டுக்கோட்டை அருகே உள்ள பொன்னவராயன் கோட்டை உக்கடை கிராமத்தை சேர்ந்த ஜெயபால் என்பவர் மகன் அன்பழகன் (30)  சுசீலாவை கத்தியால் குத்தினார்.இடுப்பு, கழுத்து ஆகிய இடங்களில் குத்து விழுந்தது.  ரத்தவெள்ளத்தில் மிதந்த சுசீலாவை  மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் அவர்  உயிரிழந்தார்.கத்தியால் குத்திய அன்பழகன் தப்பி ஓடிவிட்டார். கொலை செய்யப்பட்ட சுசீலா, அன்பழகனின் சித்தியாவார். அன்பழகனின் தாயார் கண்ணகியுடன் பிறந்தவர் சுசீலா. அவரது உடல் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில்  பிரேத பரிசோதனைக்காக சுசீலா உடல்  வைக்கப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரித்து வருகிறார்கள்.கொலையாளி அன்பழகனின் வீட்டில் பாகப்பிரிவினை நடந்து வருகிறது. இதில்  சுசீலா தலையிட்டு  அன்பழகனுக்கு சொத்து கிடைக்க விடாமல் செய்து வந்தாராம். இதனால் அவர்களுக்குள் விரோதம் இருந்து வந்ததாம். இந்த நிலையில் தான் இன்று  சித்தியை குத்தி கொலை செய்து உள்ளார்.  
error: Content is protected !!