புனேவில் இருந்து ஏர் இந்தியா விமானம் சென்னை வந்துள்ளது. விமான நிலையத்தில் தரையிரங்குவதற்காக இருந்த நிலையில், விமானம் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்டது. இதனால் விமானம் சிறிது நேரம் வானில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டது. லேசர் ஒளியால் நிலை குலைந்த விமானிகள் சுதாரித்துக்கொண்டு சாமர்த்தியமாக செயல்பட்டு மீண்டும் விமானத்தை வானில் பறக்கச் செய்தனர். விமானம் சிறிது நேரம் வானில் தத்தளித்துவிட்டு பின்னர் மீண்டும் பத்திரமாக சென்னை விமான நிலையத்தில் தரையிரங்கியது.