தமிழகத்தில் டம்மி முதல்வர் ஆட்சி அமைந்ததில் இருந்தே சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சாடியுள்ளார். ராமநாதபுரம் மற்றும் சிவகங்கையில் நடந்த இரட்டைக் கொலைகள் அதிர்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், கூலிப்படையை ஏவியவர்களைக் கைது செய்யாமல் காவல்துறை காலம் தாழ்த்துவதாகக் குற்றம்சாட்டினார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு உரிய நிவாரணமும் நீதியும் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
