Skip to content
Home » செங்கல்பட்டு… லாரி மோதி 5 பேர் பலி… ரோட்டை கடந்தபோது சோகம்

செங்கல்பட்டு… லாரி மோதி 5 பேர் பலி… ரோட்டை கடந்தபோது சோகம்

  • by Senthil

சென்னை -திருச்சி தேசிய  நெடுஞ்சாலையில் இன்று காலை  9.45 மணி அளவில்  ஒரு லாரி வேகமாக வந்து கொண்டிருந்தது. செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி என்ற இடத்தில் வந்தபோது  சிலர் கும்பலாக ரோட்டை கடந்தனர். அப்போது அந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து ரோட்டை கடந்த கும்பல் மீது மோதியது. இதில் 5 பேர் அந்த இடத்திலேயே இறந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

விபத்து நடந்ததும் லாரி டிரைவர் லாரியில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்ததும் கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வந்து விசாரணை நடத்தினர். காயமடைந்தவர்களை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். லாரி டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!