Skip to content
Home » லாரி மோதி மூதாட்டி பலி… தஞ்சையில் பரிதாபம்…

லாரி மோதி மூதாட்டி பலி… தஞ்சையில் பரிதாபம்…

  • by Senthil

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே நார்தேவன் குடிகாடு பகுதியை சேர்ந்த நாராயணசாமி என்பவரின் மனைவி கமலம் (70). இவர் திருமலை சமுத்திரம் பகுதியில் உள்ள அன்னாள் முதியோர் இல்லத்தில் தங்கி இருந்துள்ளார், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வல்லம் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று பின்னர் மீண்டும் திருமலை சமுத்திரம் சாஸ்திரா பல்கலைக்கழகம் பஸ் ஸ்டாப்பில் இறங்கி சாலையை கடக்க முயன்றுள்ளார்.

அப்போது திருச்சியில் இருந்து தஞ்சை நோக்கி வந்த டிப்பர் லாரி கமலம் மீது மோதியது இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தகவலறிந்த வல்லம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கமலம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!