நரேந்திர மோடி ராஜஸ்தானில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசுகையில், பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையில் ரூ.75 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக தெரிவித்தார். அந்த இழப்பை பொதுமக்கள் மீது சுமத்தாமல், அரசுத் துறைகளே ஏற்றுக்கொண்டதாகவும் அவர் கூறினார். மேலும், மக்களின் நலனை கருத்தில் கொண்டு கலால் வரியை லிட்டருக்கு ரூ.10 குறைத்ததாகவும் பிரதமர் மோடி விளக்கமளித்தார். அரசின் இந்த நடவடிக்கை பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
