‘கோமாளி’ படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், நடிகராக அறிமுகமான திரைப்படம் ‘லவ் டுடே’. நல்ல விமர்சனங்களை பெற்ற இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இந்த படத்திற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளியாகவில்லை. இந்த படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இந்த படத்திற்கான நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தில் பிரபல இயக்குனரான மிஷ்கின் வில்லனாக கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே விஜய்யின் லியோ, சிவகார்த்திகேயனின் மாவீரன் ஆகிய இரண்டு படங்களில் வில்லனாக நடித்துள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது பிரதீப் ரங்கநாதன் படத்திலும் இணையவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.