Skip to content
Home » காதலியை கொன்று குக்கரில் வேக வைத்த கொடூர காதலன்….

காதலியை கொன்று குக்கரில் வேக வைத்த கொடூர காதலன்….

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ள மீராரோடு பகுதியை சேர்ந்தவர் மனோஜ்ச கானி (வயது 56). இவர் போரிவிலி பகுதியில் கடை வைத்து நடத்தி வருகிறார்.இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. இந்த நிலையில் இவருக்கும் அகமத் நகரை சேர்ந்த சரஸ்வதி வைத்யா (36) என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. சரஸ்வதி யாரும் இல்லாத அனாதை என்பதால் அவருக்கு மனோஜ் ஆறுதலாக இருந்து வந்தார். 2 பேருக்கும் இடையே 20 வயது வித்தியாசம் என்றாலும் அதையும் மீறி அவர்களுக்குள் இடையே கள்ளக்காதல் உருவானது. தினமும் தனியாக சந்தித்து தங்கள் உறவை வளர்த்து வந்தனர். பின்னர் இருவரும் தாலி கட்டாமல் குடும்பம் நடத்த முடிவு செய்தனர். இதற்காக மீராரோடு கீதா நகரில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் 7- வது மாடியில் வாடகைக்கு வீடு எடுத்து கணவன்- மனைவி போல வாழ்க்கையை தொடங்கினார்கள். கடந்த 3 ஆண்டுகளாக அவர்கள் ஒன்றாக வசித்தனர். இந்தநிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அடிக்கடி 2 பேருக்கும் இடையே சண்டை மூண்டது. இதனால் காதலி மீது மனோஜ் சகானி வெறுப்பு அடைந்தார். தினமும் அவர்களுக்குள் தகராறு இருந்து வந்ததால் சரஸ்வதி வைத்யாவை போட்டு தள்ள அவர் முடிவு செய்தார். சம்பவத்தன்று 2 பேருக்கும் இடையே மீண்டும் தகராறு வெடித்ததால் ஆத்திரம் அடைந்த மனோஜ் சகானி காதலி சரஸ்வதி வைத்யாவை சரமரியாக அடித்து உதைத்தார். அரிவாளாலும் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த சரஸ்வதி பரிதாபமாக இறந்தார்.

எங்கே போலீசில் சிக்கி விடுவோமோ? என மனோஜ் பயந்தார். அவரது மனதில் கொடூரமான எண்ணம் உதித்தது. அதன்படி சரஸ்வதி உடலை மரம் அறுக்கும் எந்திரத்தால் துண்டு துண்டாக வெட்டினார். கை,கால்கள், விரல்கள் என உடல் உறுப்புகள் அனைத்தையும் தனியாக துண்டித்து எடுத்தார். பின்னர் அந்த உடல் உறுப்புகளை ஒரு பெரிய குக்கரில் போட்டு அடுப்பில் வேக வைத்தார். தடயங்களை அழிக்க அவர் பல்வேறு முயற்சிகளை மேற் கொண்டார். ஆனால் சம்பவம் நடந்து 2 நாட்களுக்கு பிறகு அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதை தாங்க முடியாத அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பொதுமக்கள் ஏதோ விபரீதம் நடந்து இருக்கிறது என நினைத்து நயாநகர் போலீஸ் ஸ்டேசனிற்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மனோஜ் சகானி தங்கி இருந்து வீட்டு கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தனர். அப்போது அங்கு சரஸ்வதி வைத்யா அழுகிய நிலையில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அவரது உடல் உறுப்புகள் அனைத்தும் வெட்டி எடுக்கப்பட்டு பாதியாக இருந்தது. சமையல் அறையில் இருந்த குக்கரில் வேக வைத்த நிலையில் இருந்த உடல் உறுப்புகளை போலீசார் மீட்டனர். ஒரு பாலிதீன் கவரில் அந்த உறுப்புகளை சுற்றி ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அந்த வீட்டில் இருந்த மனோஜ் சகானியை போலீசார் கைது செய்தனர். கொலையுண்ட பெண்ணின் உடலில் சில உறுப்புகள் மாயமாகி இருந்தது தெரியவந்தது. இதனால் அந்த உறுப்புகளை மனோஜ் ஏதாவது ஒரு இடத்தில் புதைத்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதுபற்றி போலீசார் அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர். என்ன காரணத்துக்காக இந்த கொடூர கொலை நடந்தது என தெரியவில்லை. டெல்லியில் கடந்த ஆண்டு மே மாதம் ஷ்ரத்தா வாக்கர் (வயது 26) என்ற பெண் காதலன் அப்தாப் பூனாவாலா என்பவரால் கொல்லப்பட்டார்.

தாலி கட்டாமல் அவர்கள் குடும்பம் நடத்தினார்கள். அப்போது ஷரத்தா வாக்கர் தன்னை திருமணம் செய்ய காதலனை வற்புறுத்தினார். இதனால் ஏற்பட்ட தகறாரில் அப்தாப் காதலியை கழுத்தை நெரித்து கொன்றார். பின்னர் ஷரத்தா உடலை 35 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் வைத்தார். 3 வாரம் அதில் வைத்து இருந்த காதலியின் உடல் உறுப்புகளை பின்னர் பிளாஸ்டிக் பையில் சுற்றி குப்பைத்தொட்டி, நீர் நிலைகள், வனப்பகுதியில் வீசினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த செய்திகளை படித்த மனோஜ் அதே போன்று கொலை செய்ய திட்டமிட்டதாவும்,அதனால் காதலி உடலை துண்டு துண்டாக வெட்டியதாகவும் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர். இதில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகலாம் என தெரிய வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!