விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் சொகுசு விடுதி நடத்தி வந்த அஜித் (25) என்ற இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 4 பேர் கொண்ட கும்பல் அஜித்தை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த அஜித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டக்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கான காரணம் மற்றும் தப்பியோடிய மர்மநபர்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
