Skip to content
Home » அதிக வட்டி தருவதாக மோசடி செய்த நியோமேக்ஸ்… நூற்றுகணக்கானோர் புகார்…

அதிக வட்டி தருவதாக மோசடி செய்த நியோமேக்ஸ்… நூற்றுகணக்கானோர் புகார்…

மதுரை எஸ்.எஸ்.காலனியில் கடந்த 2010 முதல் நியோமேக்ஸ் (Niomax properties private limited) என்ற தனியார் நிதி நிறுவனத்தை வீரசக்தி, பாலசுப்பிரமணியம் மற்றும்  கமலக்கண்ணன் ஆகிய மூவரும் இயக்கி வந்துள்ளனர். தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு பெயர்களில் (Garlando properties pvt ltd, Transco properties pvt Ltd, tridas properties pvt Ltd, glowmax properties pvt Ltd) 17க்கும் மேற்பட்ட கிளை நிறுவனங்களை பலர் நிர்வகித்து வந்துள்ளனர்.

இந்த நிறுவனத்தின் மூலம் வாங்கப்படும் நிலத்தில் முதலீடு செய்தால், குறிப்பிட்ட கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் அந்த தொகைக்கு மாதம்தோறும் பன்மடங்கு வட்டி தருவதாக கூறி பல்வேறு மாவட்டங்களில் பல கோடி ரூபாய் வசூலித்துள்ளனர். கடந்த 6 மாதங்களுக்கு மேலாக இவர்கள் வசூலித்த தொகைக்குரிய வட்டி தராததால் சந்தேகமடைந்த முதலீட்டாளர்கள் விசாரித்த போது நிறுவனங்கள் இயங்கி வந்த அலுவலகங்களை அடைத்து விட்டு இயக்குனர்கள் அனைவரும் தலைமறைவாகி விட்டது தெரியவந்துள்ளது.

இவர்களது நெல்லை மற்றும் கோவில்பட்டி கிளை இயக்குனர்களான சைமன் ராஜா, கபில் ஆகியோரிடம் 73 லட்சம் ரூபாய் கொடுத்து ஏமாந்திருந்த கோவில்பட்டியை சேர்ந்த ஜெயசங்கரீஸ்வரன் என்பவர் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் நிறுவன இயக்குனர்களான வீரசக்தி, பாலசுப்பிரமணியம், கமலக்கண்ணன் மற்றும் கிளை இயக்குனர்களான சைமன் ராஜா, கபில் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த ஜூன் 25 அன்று மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள இந்நிறுவனம் மற்றும் அதன் இயக்குனர்களுக்கு சொந்தமான அலுவலகங்கள், வீடுகள் உள்ளிட்டவற்றில் சோதனை நடத்தி சொத்துக்கள் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருந்தன.

மேலும், இதுவரை 5 கோடி ரூபாய் வரை ஏமாற்றப்பட்டு உள்ளதாக 20 நபர்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகாரளித்திருந்தனர். தலைமறைவாக இருந்த இந்நிறுவன இயக்குனர்களை போலீஸார் தேடி வந்த நிலையில், மதுரையில் தங்கியிருந்த நெல்லை கிளையின் இயக்குநர் சைமன் ராஜா, கோவில்பட்டி கிளை இயக்குநர் கபில், பாளையங்கோட்டை இயக்குநர்கள் இசக்கி முத்து, சகாய ராஜா ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் சிறையில் அடைத்தனர்.

பாதிக்கப்பட்ட மக்கள் மனு அளிக்க வசதியாக மதுரை மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு சார்பில் நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து பணம் இழந்தவர்கள் மனு அளிக்க முகாம் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, அறந்தாங்கி, மதுரை பகுதியில் உள்ள நியோ மேக்ஸ், அதன் கிளை நிறுவனங்களில் பணத்தை  இழந்தவர்கள் மனுக்களை அளித்துச் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!