Skip to content
Home » மகா.,வில் சரத்பவார் கட்சியை உடைத்த மற்றொரு தலைவருக்கு மத்திய அமைச்சர் பதவி.. பாஜ முடிவு..

மகா.,வில் சரத்பவார் கட்சியை உடைத்த மற்றொரு தலைவருக்கு மத்திய அமைச்சர் பதவி.. பாஜ முடிவு..

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் கூட்டம்  இன்று டில்லியில் நடைபெறுகிறது.  அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. அதற்கு முன்பாக, ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்தியபிரதேசம், தெலங்கானா மற்றும் மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யவும், தேர்தல் நடக்கும் மாநிலங்களில் கட்சி அமைப்பிலும் முக்கிய மாற்றங்கள் செய்யவும் பாஜ திட்டமிட்டுள்ளது. இதனால் மத்திய அமைச்சரவையில் மாற்றம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது. வரும் 20ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்க உள்ளதால் அதற்கு முன்னதாக அமைச்சரவை மாற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுதவிர, மகாராஷ்டிரா அரசியலில் நேற்று திடீர் திருப்பம் ஏற்பட்டது. தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார், பாஜ கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்து துணை முதல்வராக பதவியேற்றுள்ளார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு நெருக்கமானவரான மூத்த தலைவர் பிரபுல் படேல், அஜித் பவாருடன் கைகோர்த்துள்ளார். இதனால் பிரபுல் படேலுக்கு முக்கிய பொறுப்பு தரும் வகையில், அமைச்சரவையில் வாய்ப்பு தரப்படலாம் என கூறப்படுகிறது. இதே போல, அஜித் பவார் வருகையில், மகாராஷ்டிராவில் ஏற்கனவே துணை முதல்வராக உள்ள பாஜ முக்கிய தலைவர் தேவேந்திர பட்நவிஸ், அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டு, ஒன்றிய அமைச்சரவையில் இடம் பெறலாம் என கூறப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!