திருச்சி தில்லைநகர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, ரெட்டை வாய்க்கால் அருகே பிரசாந்த் என்பவர் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்தார். உடனே போலீசார் அவரை பிடித்து சோதனை செய்ததில், அவரிடம் விற்பனைக்காக போதை மாத்திரை இருப்பது கண்டறியப்பட்டது. உடனே போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து போதை மாத்திரை, பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
